'மனசு, பார்க்க வேண்டும் என்று குதிக்கிறது, புத்தி 'முடியுமா' என்று பயம் காட்டுகிறது' என்று சொன்னேன். 'அப்போ கிளம்பு' என்றார் நாராயணன். அந்த சமயம் காலை நாலு மணி இருக்கும்...! நல்ல வரம் பெற்று வந்திருந்ததால் நல்ல வார்த்தை வந்தது...! எல்லாம் பெரியோர் ஆசீர்வாதம். எழுந்தோம், நடந்தோம் ஒரு கட்டஞ்ச்சாய் குடித்தோம், அவ்வளவுதான், சூப்பர் நடராஜா சர்வீஸ்தான்...!
வெள்ளியங்கிரீஸ்வரர் எங்களுக்கு வேண்டிய பலத்தையும் தெம்பையும் கொடுத்து நடத்தி வைத்தார். வழியெல்லாம் பச்சை பசேலென்று இருந்தது. இப்போது அதிகமாக சம வெளி, பார்க்க பார்க்க ரம்மியமாக இருந்தது...! நினைத்து பாருங்கள், பெரிய திறந்தவெளி, சுற்றிப்பார்த்தால் ஊர் குட்டியாக தெரிகிறது. கிழே மிதக்கும் மேகங்கள், குளு குளு என்று காற்று, வேறு என்ன வேண்டும், சுறு சுறு நடைக்கு. அனைத்தையும் செய்து கொடுத்தார் அந்த வெள்ளியங்கிரீச்வர்.
ஐந்தாவது மலையில் இன்னொரு நண்பர் குழுவை பார்த்தோம். அப்போது ஞாயிறு காலை ஒன்பது மணி இருக்கும். எங்களை பார்த்து கொஞ்சம் ஆச்சரியப் பட்டு போனார்கள். என்னால் மெல்ல வரும் நாராயணனை பார்த்து எனக்குதான் சங்கடம். ஆனால் அவர் சங்கடப் பட்டுகொண்ட மாதிரியே தெரியவில்லை...! இந்த இடத்திலாவது நாராயணனை பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும். நாராயணன் ஒரு பெரிய யோகி (நீங்கள் எதிர்பார்க்கும் ஜடா முடியுடன் அல்ல...!) சித்தர் என்றே சொல்லலாம். முக்காலம் உணர்ந்தவர், அனால் பரப்பிரமம் போல காட்டிகொள்வார். சில சமயங்களில் 'அதை செய்யாதே' என்பார், காரணம் சொல்ல மாட்டார். நாமாக புரிந்து கொண்டு நிறுத்த வேண்டும். சொன்னதை கேட்காமல் எதாவது வம்பில் மாட்டிகொண்டால், பிறகு அசடு வழிந்துகொண்டு அவர் முன் நிற்க வேண்டும். இத்துணை சிறப்பு பெற்ற நாராயணன் வயதில் என்னை விட இளையவர், ஞானத்தில் பெரியவர். அவரோடு நான் செல்கிறேன் என்பது இன்னும் ஒரு சிறப்பு, எல்லாம் வெள்ளியங்கிரீச்வர் சித்தம்.
எங்களை எதிரே பார்த்தவர்கள், எங்களுக்கு (முக்கியமாக எனக்கு) பேரிச்சம் பழம், கடலை, பழம் என்று கொடுத்தார்கள்.

இதுதான் அந்த இடம். இந்தப் படத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்பது உங்கள் யூகம். இந்த இடத்தில்தான் பீமன் உருண்டை என்று ஒரு பெரிய்ய்ய்ய பாறையை காட்டினார்கள். அது ஒரு ஏழு மாடி எட்டு மாடி சைசில் இருந்தது. கொஞ்சம் உற்று பார்த்தால் பயமாக இருந்தது. ஆனால் இப்போது ஏழாவது மலையே மனதில் இருந்தது. எதை பார்த்தாலும் சந்தோசமும் மவுனமும் சேர்ந்தே தோன்றியது. உள்ளுக்குள்ளே வேறு எதோ நடந்து கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தது - அது என்னவென்று தெரியவில்லை, இதுவரை...!
ஆறாவது மலை 'திருநீர் மலை'. இங்கே மண்ணெல்லாம் விபூதி போன்றே இருக்கிறது. பார்ப்பதற்கு மட்டுமல்ல வாசனையும் விபூதி போலவே உள்ளது. நிறையபேர் அங்கே மண்ணை சுரண்டி பிரசாதம் போல கொண்டு வருகிறார்கள். ஆறாவது மலை முடியும் இடத்தில இருப்பது, அற்புத ஆண்டி சுனை...!
வெள்ளியங்கிரீஸ்வரர் எங்களுக்கு வேண்டிய பலத்தையும் தெம்பையும் கொடுத்து நடத்தி வைத்தார். வழியெல்லாம் பச்சை பசேலென்று இருந்தது. இப்போது அதிகமாக சம வெளி, பார்க்க பார்க்க ரம்மியமாக இருந்தது...! நினைத்து பாருங்கள், பெரிய திறந்தவெளி, சுற்றிப்பார்த்தால் ஊர் குட்டியாக தெரிகிறது. கிழே மிதக்கும் மேகங்கள், குளு குளு என்று காற்று, வேறு என்ன வேண்டும், சுறு சுறு நடைக்கு. அனைத்தையும் செய்து கொடுத்தார் அந்த வெள்ளியங்கிரீச்வர்.
ஐந்தாவது மலையில் இன்னொரு நண்பர் குழுவை பார்த்தோம். அப்போது ஞாயிறு காலை ஒன்பது மணி இருக்கும். எங்களை பார்த்து கொஞ்சம் ஆச்சரியப் பட்டு போனார்கள். என்னால் மெல்ல வரும் நாராயணனை பார்த்து எனக்குதான் சங்கடம். ஆனால் அவர் சங்கடப் பட்டுகொண்ட மாதிரியே தெரியவில்லை...! இந்த இடத்திலாவது நாராயணனை பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும். நாராயணன் ஒரு பெரிய யோகி (நீங்கள் எதிர்பார்க்கும் ஜடா முடியுடன் அல்ல...!) சித்தர் என்றே சொல்லலாம். முக்காலம் உணர்ந்தவர், அனால் பரப்பிரமம் போல காட்டிகொள்வார். சில சமயங்களில் 'அதை செய்யாதே' என்பார், காரணம் சொல்ல மாட்டார். நாமாக புரிந்து கொண்டு நிறுத்த வேண்டும். சொன்னதை கேட்காமல் எதாவது வம்பில் மாட்டிகொண்டால், பிறகு அசடு வழிந்துகொண்டு அவர் முன் நிற்க வேண்டும். இத்துணை சிறப்பு பெற்ற நாராயணன் வயதில் என்னை விட இளையவர், ஞானத்தில் பெரியவர். அவரோடு நான் செல்கிறேன் என்பது இன்னும் ஒரு சிறப்பு, எல்லாம் வெள்ளியங்கிரீச்வர் சித்தம்.
எங்களை எதிரே பார்த்தவர்கள், எங்களுக்கு (முக்கியமாக எனக்கு) பேரிச்சம் பழம், கடலை, பழம் என்று கொடுத்தார்கள்.
இதுதான் அந்த இடம். இந்தப் படத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்பது உங்கள் யூகம். இந்த இடத்தில்தான் பீமன் உருண்டை என்று ஒரு பெரிய்ய்ய்ய பாறையை காட்டினார்கள். அது ஒரு ஏழு மாடி எட்டு மாடி சைசில் இருந்தது. கொஞ்சம் உற்று பார்த்தால் பயமாக இருந்தது. ஆனால் இப்போது ஏழாவது மலையே மனதில் இருந்தது. எதை பார்த்தாலும் சந்தோசமும் மவுனமும் சேர்ந்தே தோன்றியது. உள்ளுக்குள்ளே வேறு எதோ நடந்து கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தது - அது என்னவென்று தெரியவில்லை, இதுவரை...!
ஆறாவது மலை 'திருநீர் மலை'. இங்கே மண்ணெல்லாம் விபூதி போன்றே இருக்கிறது. பார்ப்பதற்கு மட்டுமல்ல வாசனையும் விபூதி போலவே உள்ளது. நிறையபேர் அங்கே மண்ணை சுரண்டி பிரசாதம் போல கொண்டு வருகிறார்கள். ஆறாவது மலை முடியும் இடத்தில இருப்பது, அற்புத ஆண்டி சுனை...!
No comments:
Post a Comment